சமகால புகைப்படமும்
கவிதையும்
சிறப்பு நெடுவரிசை
கவிதைகள் முத்துராசா குமார்
புகைப்படம்
அபுல் கலாம் ஆசாத்

போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Digital Moon Photography
Digital Moon © Abul Kalam Azad 2005

செந்தட்டி

எறும்புகள் தின்னும்
பக்கோடா போன்றுள்ள
எங்கள் தொல்மலையை
ராஜாங்க அதிகாரிகள்
விஞ்ஞானிகள்
கோப்புகளின் சூத்திரங்களை ஓதி
துருவுகையில்
சோலைக்காட்டின் மதுவிருந்தில்
பாட்டில்கள் நொறுக்கி
குழம்பியிருந்த இளந்தாரி நாங்கள்.
மூத்தோர்களையும்
கால்நடைகளையும்
மின்சார முனையால் விரட்டினர்.
தெய்வ மூதாயின் மரவுடலில்
கரிமருந்து திரிகளை
மாலையாகச் சுற்றினர்.
புல்லூத்து
பறவைகள்
பாலூட்டிகள்
பூக்கள்
விலங்குகள் அதிர்ந்து
ஒன்றையொன்று அணைத்தன.
ப்ளக் பாய்ண்ட்டுகளில்
குடியேறும்
குளவிகளாக்கப்பட்ட எங்களை
மலையின்
அரிய அரிய பட்டாம்பூச்சிகள்
வர்ணங்கள் வலிக்கத் தூக்கின
முழிப்பின்றி கிடந்தோம்.
அழிப்பதற்கென்றே வடிவாய்
உருவாக்கப்பட்ட இயந்திரங்கள்
மலையுடன் முட்டுகையில்
நாட்டார் பாட்டுகளைப் பிறழாது பாடும்
மலைக்குற்றமிழைக்காத
சிறுமியொருத்தி
இயந்திரங்களின் தோலில்
செந்தட்டியை அரக்கினாள்.



அபுல் கலாம் ஆசாத், சமகால இந்திய புகைப்படக்காரர் மற்றும் புகைப்படங்களுக்கான ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் நிறுவனர். அபுலின் புகைப்படப் படைப்புகள் பெரும்பாலும் சுயசரிதை மற்றும் அரசியல், கலாச்சாரம், சமகால நுண்ணிய வரலாறு, பாலினம் மற்றும் சிற்றின்பம் ஆகிய பகுதிகளை ஆராய்கின்றன. அவரது படைப்புகள் சாதாரண மக்கள் இல்லாத வரலாறு மற்றும் முக்கியமாக அழகான படங்கள் மற்றும் சின்னங்களால் வழங்கப்படுகிற சமகால இந்திய வரலாற்றை மற்றொரு பரிணாமத்தில் எடுத்துரைக்க முயற்சிக்கின்றன.

Muthurasa kumar

முத்துராசா குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் – தென்கரை சொந்த ஊர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் & தொடர்பியல் துறையில் M.A.Mphil பயின்றுள்ளார். ஆனந்தவிகடனில் மாணவப் பத்திரிகையாளரகப் பணிபுரிந்துள்ளார். முத்துராசா குமாரின் கட்டுரைகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு The Wire, The News Minute, Malayala Manorama முதலான செய்தித்தளங்களில் வெளிவந்திருக்கின்றன. ஊடகத்துறையில் வழங்கப்படும் ‘LAADLI’ விருது இவரது கட்டுரைக்காக வழங்கப்பட்டிருக்கிறது.’செதில் பய’ ‘டிஜிட்டல் மூஞ்சி’ போன்ற சுயாதீன இசை ஆல்பங்களை எழுதி இயக்கியுள்ளார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கட்டுரைகளும், கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். தற்போது சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையிலும் இயங்கி வருகிறார்.



Published on February 12, 2021

Share

Home » Portfolio » ஒளியெழுத்து » செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

Related Articles

2021-11-18T10:15:13+05:30

கழுமரவேர் | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-11-12T14:28:19+05:30

முந்திரி | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-09-25T21:50:15+05:30

கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து

கூழாங்கல் பதித்த தாயத்து, சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை, கவிதைகள் முத்துராசா குமார், புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T21:45:03+05:30

செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.