தமிழ்
படிமங்கள் நிழல்கள் பிரதிபலிப்புகள், சிறப்பு நெடுவரிசை ஆர் ஆர் சீனிவாசன்
போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை, அதன் வரலாறு, அழகியல், நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்.
போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை, அதன் வரலாறு, அழகியல், நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்.
காலவரிசைப் படி எல்லாவற்றையும் ஆராயும் போது, கேப்டன் லின்னேயஸ் ட்ரைப் தான் தமிழகத்தை முதன்முதலில் புகைப்படம் எடுத்துள்ளார் என்று அறிய முடிகிறது. இந்தியாவிலேயே புகைப்பட ஸ்டுடியோவும், தொழிற்கலைப் பள்ளியும் முதலில் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. மதராஸ் ராஜதானியின் தலைநகராக இருந்த சென்னையில் மே மாதம் 1850ல் தொழிற்கலைப் பள்ளி அலெக்ஸாண்டர் ஹண்டரினால் தொடங்கப்பட்டது. அப்போது புகைப்படக்கலை முக்கியப் பாடமாகவும் இருந்தது. ஹண்டர் மற்றும் எலியட் ஆகியோர் மாணவர்களுடன் சென்று, தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்தனர்.
பிரெஸ்ஸோன் ஒரு மகத்தானப் புகைப்படக்கலைஞர், அதேவேளையில் அவர் மகத்தான உருவப்படப் புகைப்படக்கலைஞரும் கூட, ஏனெனில் உருவப்படப் புகைப்படக் கலைஞராக இருப்பவர்கள், மகத்தான புகைப்படக்கலைஞர்களாக இருப்பதில்லை. நாற்பதாண்டுகால புகைப்படப் பயணத்தில், ‘பத்திரிக்கைப்படக்கலை’ (Photo Journalism) என்பதை முழு அர்த்தத்துடன் செயல்படுத்திக் காட்டியவர் பிரெஸ்ஸோன். இன்னும் சொல்லப்போனால் அப்பதத்தினை புனர்மாற்றம் செய்து புதுமையாகக் கண்டுபிடித்தவர் என்றே சொல்லலாம்.
புகைப்படக்கலைஞர் ஜான் ஐசக் பொறுத்த வரையில் புகைப் படங்களைவிட மனித மாண்பே முக்கியம். அவருடைய புகைப்பட அனுபவங்களில், ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே வேலை செய்யும்போது, ஒரு சிறு தெருவழியாக அவர் சென்று கொண்டிருக்கிறார். செல்லும் வழியில் ஒரு காட்சி, தெரு முனையில் ஓர் இளம்பெண் முழுநிர்வாணமாக, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தபடி, அதன் தொப்புள் கொடிகூட வெட்டப்படவில்லை, ரத்த வெள்ளத்தில் குழந்தையின் அழுகுரலோடு அக்காட்சி விரிந்து கிடக்கிறது.
ரகுராய் ‘‘காத்திருத்தலே புகைப்படக்கலை’’ என்றார். ஒவ்வொரு புகைப்படத்திலும் ஏதாவது அற்புதங்கள் நிகழவேண்டும். அந்த அற்புதங்கள் புகைப்படத்தை மேலும் செழுமையாக்குகின்றன. கடுமையான அர்ப்பணிப்பும், வெறியும், நேர்மையும் கொண்டு காத்திருக்கும் போது, இயற்கை உங்கள் மேல் கருணை கொண்டு சில சம்பவங்களை காட்சிப் படிமத்தில் நிகழ்த்தும். தான் அதனை நம்பவுதாகவும் குறிப்பிட்டார்.
புகைப்படக்கலையின் வரலாறு என்பது ஊசித்துளைக் கேமராவினுள்தான் தொடங்குகிறது.கேமரா அப்ஸ்க்யூரா (CAMERA OBSCURA), கேமரா லூசிடா (CAMERA LUCIDA) என்ற இருவகையான புகைப்படக் கருவிகள் – ஓவியர்கள் தங்களுடைய படிமங்களைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டவை.
அவருடைய படைப்புகள் எல்லாவற்றையும் உதறிக்கொண்டு எளிமையான புகைப்படங்களாகவே இருந்தன. வெறுமனே புகைப்படக்கலைஞராக மட்டுமல்லாமல், ஓர் ஓவியராக, கவிஞராக, நகைச்சுவையாளராக அவர் இருந்தார். புகைப்படக்கலையில் ஓவியத்தின் பாதிப்பை இவரின் படங்களில் உணரலாம். குறிப்பாக சிதைக்கப்பட்ட நிர்வாண உருவங்கள், அசையாப் பொருட்களின் சித்திரங்கள் இவருடைய ஓவிய ஆர்வத்தை வெளிப்படுத்தின. இரு வேறு காட்சிகளை இணைப்பதும், ஒரே புகைப்படத்தில் பல்வேறு புகைப்பட அனுபவங்கள் பின்னப்பட்டிருப்பதும் இவரிடமே தொடங்குகிறது.
தரிசனமனை என்னும் பாளையங்கோட்டை கண்தெரியாதோர் பள்ளி 100 ஆண்டு கால வரலாறு கொண்டது. அதைப் பற்றிய மனப்பதிவுகளையும், புகைப்படப்பதிவுகளையும் செய்வதற்கான உந்துதல் சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். கல்லூரி முடிந்து பாளை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது மழை தன் தோகையை விரித்து மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. என்னைப் போலவே ஆடுகளுக்கும் அப்போது மழையில் நனைய விருப்பமில்லை. எனதருகில் கண்தெரியாத மாணவர்கள் ஐந்தாறுபேர் கைகளைப் பின்னிப் பிணைத்தபடி ஒரே உடலாய் நின்றிருந்தனர். பள்ளியின் விடுமுறை துவங்குகிறது. நீண்ட பிரிவினை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே உடல்கள் பிரியமறுத்து
வசீகரக் கோமாளிகளே, நீண்ட காலமாய் உங்களில் ஒருவனாக ஆகிவிடவேண்டுமென்ற எனது கனவு மெல்ல மறைந்து போகும் அபாயம் எனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்கள் மேல் உள்ள காதல் துளிகளை உங்களிடம் நான் சொல்ல வரும்போதெல்லாம், ஒன்று நீங்கள் குட்டையாயிருக்கிறீர்கள் அல்லது மிக உயரமாயிருக்கிறீர்கள். நீங்கள் அண்ணாந்து பார்ப்பதையும் குனிந்து பார்ப்பதையும் நானும் விரும்பவில்லை.
மேகாலயா இயற்கையின் சுரங்கம்… எனவே எண்ணற்ற கனிமங்களை அரசும் பன்னாட்டு முதலாளிகளும் நாடெங்கும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர். 15 க்கும் அதிகமான அரிய கனிமங்கள் மேகாலயாவில் தோண்டி எடுக்கப் படுகிறது. தொழிலாளர்கள் வேலை செய்வது, மலைகள் தோண்டப்பட்ட கோரக்காட்சிகள், இயந்திரங்கள், பெரும் லாரிகள், கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் என படிமங்கள் விரிந்து கொண்டே போகிறது.