சமகால புகைப்படமும்
கவிதையும்
சிறப்பு நெடுவரிசை
கவிதைகள் முத்துராசா குமார்
புகைப்படம்
அபுல் கலாம் ஆசாத்

போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Black Mother 1999-2000
Black Mother, first part of Story of Love, Desire and Agony Series © Abul Kalam Azad 1999 – 2000

பேதலிப்பாடல்

சித்தெறும்புகளை
மேய்ச்சலுக்கு ஓட்டுகிறாள்.
பலநாளு மூதேவிய
தாங்குனவிய்ங்க
ஒருநாளு சீதேவிய
தாங்க மாட்டாய்ங்கென
அடர்மழை கூர்வெயிலை
தூத்துபவர்களை
திட்டித் தொளிக்கிறாள்.
மாண்டவர்களை
நடுகல்லுக்கடியில் தோண்டுகிறாள்.
தனது கழுத்துக்கும் இடுப்புக்கும் நடுவே
தானியக் குளுமையை வனைகிறாள்.
தொரட்டியால்
நிலங்கீறி விளையாடுகையில்  பெறக்கியெடுத்தப் பழங்காசுகளுக்கு
கீத்துமாங்காய் கேட்கிறாள்.
தானாய் நெற்றுடைந்து மிதக்கும்
இலவம் பஞ்சுகளை
தரைக்கிறங்காதுப் பிடித்து
விடாய் உதிரத்தில் செகப்பாக்கி
பறக்கவிடுகிறாள்.
எல்லைத் தெய்வங்களுக்குச் சாட்டிய கோடித்துணிகளை அவிழ்த்து
தனக்குச் சுற்றுகிறாள்.
சூரியகாந்திக் காட்டுக்குள்
கிளிகளை அரட்டும்
நய்ந்த பொம்மையுடன்
வெத்தாகப் புணர்கிறாள்.
துரோகமிழைத்த கணவன்
இவள் உக்கிரமாய் பேதலிக்க
மடப்புரத்தில் காசுவெட்டினான் என்பது
சனப் பொறணியின்
கதைப்பாடல்.



அபுல் கலாம் ஆசாத், சமகால இந்திய புகைப்படக்காரர் மற்றும் புகைப்படங்களுக்கான ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் நிறுவனர். அபுலின் புகைப்படப் படைப்புகள் பெரும்பாலும் சுயசரிதை மற்றும் அரசியல், கலாச்சாரம், சமகால நுண்ணிய வரலாறு, பாலினம் மற்றும் சிற்றின்பம் ஆகிய பகுதிகளை ஆராய்கின்றன. அவரது படைப்புகள் சாதாரண மக்கள் இல்லாத வரலாறு மற்றும் முக்கியமாக அழகான படங்கள் மற்றும் சின்னங்களால் வழங்கப்படுகிற சமகால இந்திய வரலாற்றை மற்றொரு பரிணாமத்தில் எடுத்துரைக்க முயற்சிக்கின்றன.

Muthurasa kumar

முத்துராசா குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் – தென்கரை சொந்த ஊர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் & தொடர்பியல் துறையில் M.A.Mphil பயின்றுள்ளார். ஆனந்தவிகடனில் மாணவப் பத்திரிகையாளரகப் பணிபுரிந்துள்ளார். முத்துராசா குமாரின் கட்டுரைகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு The Wire, The News Minute, Malayala Manorama முதலான செய்தித்தளங்களில் வெளிவந்திருக்கின்றன. ஊடகத்துறையில் வழங்கப்படும் ‘LAADLI’ விருது இவரது கட்டுரைக்காக வழங்கப்பட்டிருக்கிறது.’செதில் பய’ ‘டிஜிட்டல் மூஞ்சி’ போன்ற சுயாதீன இசை ஆல்பங்களை எழுதி இயக்கியுள்ளார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கட்டுரைகளும், கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். தற்போது சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையிலும் இயங்கி வருகிறார்.



Published on December 16, 2020

Share

Home » Portfolio » ஒளியெழுத்து » பேதலிப்பாடல்

Related Articles

2021-11-18T10:15:13+05:30

கழுமரவேர் | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-11-12T14:28:19+05:30

முந்திரி | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-09-25T21:50:15+05:30

கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து

கூழாங்கல் பதித்த தாயத்து, சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை, கவிதைகள் முத்துராசா குமார், புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T21:45:03+05:30

செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.