சமகால புகைப்படமும்
கவிதையும்
சிறப்பு நெடுவரிசை
கவிதைகள் முத்துராசா குமார்
புகைப்படம்
அபுல் கலாம் ஆசாத்

போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

My anger and other stories
My anger and other stories © Abul Kalam Azad 2010

ஒசரக் கூனிச்சி

நெருப்புக்கோழி வடிவில்
நின்றபடி மலம் விடும்
எனது முதுவுயிர்
நாளை அதிவிடியலில்
பறந்துவிடுமென்றக் கணிப்பை கமுக்கமாக்கி
இன்றுத் தெருப்பிள்ளைகளிடம்
எனைத் தூக்கி விளையாடக் கொடுத்தேன்.
கூனில் கைவைத்துத் தாண்டுகிறார்கள்.
கெடாயுடன் முட்ட விடுகிறார்கள்.
டுப்பாக்கியாக்குகிறார்கள்.
நெத்திக்கிட்டவுள்ள
வானைத் தடவுகிறார்கள்.
வாணவேட்டுகளை எப்படி வய்வாய்.
தரையையே பார்த்து
மனனமான ஆண்டுகளின்
ஒவ்வொரு நாளையும் சொல்.
உன் குழந்தைகள் பால்குடித்தால்
நாய்க்குட்டிகளைப் போல எக்குப்போடுவார்களா.
விதை முளைப்பதை
செடியாவதை
நகங்கள் நீளும் அசைவுகளை
உன்னால் மட்டுமே பார்க்கமுடியுமல்லவா.
எத்தனை படி கண்ணீரை
நிலத்தில் ஊத்தியிருப்பாய்.
பொங்கும் ஊற்றின்
பொடி மணல்களை
எண்ணியிருப்பாய்தானே.
கடைசியாக எப்போது
மேலே பறவையைப் பார்த்தாய்.
பாடையிலும் இதேமாதிரிதான் படுப்பாயா.
அனைத்துக்கும் பதில் சொல்வதற்குள்
விடியலில் சிறுமியொருத்தி
என்னைப் பட்டன்கத்தியாக
டக்கென நிமிர்த்தினாள்.
அமுக்கிய எருக்கம்பூவிலிருந்து வெளியேறிய காற்றாய்
சொடக்கு சத்தங்கேட்டது.



அபுல் கலாம் ஆசாத், சமகால இந்திய புகைப்படக்காரர் மற்றும் புகைப்படங்களுக்கான ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் நிறுவனர். அபுலின் புகைப்படப் படைப்புகள் பெரும்பாலும் சுயசரிதை மற்றும் அரசியல், கலாச்சாரம், சமகால நுண்ணிய வரலாறு, பாலினம் மற்றும் சிற்றின்பம் ஆகிய பகுதிகளை ஆராய்கின்றன. அவரது படைப்புகள் சாதாரண மக்கள் இல்லாத வரலாறு மற்றும் முக்கியமாக அழகான படங்கள் மற்றும் சின்னங்களால் வழங்கப்படுகிற சமகால இந்திய வரலாற்றை மற்றொரு பரிணாமத்தில் எடுத்துரைக்க முயற்சிக்கின்றன.

Muthurasa kumar

முத்துராசா குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் – தென்கரை சொந்த ஊர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் & தொடர்பியல் துறையில் M.A.Mphil பயின்றுள்ளார். ஆனந்தவிகடனில் மாணவப் பத்திரிகையாளரகப் பணிபுரிந்துள்ளார். முத்துராசா குமாரின் கட்டுரைகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு The Wire, The News Minute, Malayala Manorama முதலான செய்தித்தளங்களில் வெளிவந்திருக்கின்றன. ஊடகத்துறையில் வழங்கப்படும் ‘LAADLI’ விருது இவரது கட்டுரைக்காக வழங்கப்பட்டிருக்கிறது.’செதில் பய’ ‘டிஜிட்டல் மூஞ்சி’ போன்ற சுயாதீன இசை ஆல்பங்களை எழுதி இயக்கியுள்ளார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கட்டுரைகளும், கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். தற்போது சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையிலும் இயங்கி வருகிறார்.



Published on March 30, 2021

Share

Home » Portfolio » ஒளியெழுத்து » ஒசரக் கூனிச்சி

Related Articles

2021-11-18T10:15:13+05:30

கழுமரவேர் | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-11-12T14:28:19+05:30

முந்திரி | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-09-25T21:50:15+05:30

கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து

கூழாங்கல் பதித்த தாயத்து, சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை, கவிதைகள் முத்துராசா குமார், புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T21:45:03+05:30

செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.